இதுதான் கீதை
உலகில் இதுவரை எழுதப்பட்டுள்ள நூல்களில் சிறந்தது என்று பட்டியலிட்டால் அதில் நமது பகவத் கீதையும் நிச்சியம் இடம்பெறும்.
கடவுள் மனிதனுக்கு அறிவுரை வழங்குவது ,
தேவ தூதர்கள் நெறிகளை வகுப்பது,
ஒரு காவியத்தின் வழியே வாழ்வியல் முறையை தெரிந்து கொள்வது ,
தத்துவார்த்தமான விளக்கங்களை உள்ளடக்கியது என்ற வகைகளிலேயே உலகின் ஆதி நூல்கள் வெளிப்பட்டது .
ஆனால் கீதை இதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. மனிதன் கடவுளிடம் அல்லது கடவுள் தன்மை உள்ள ஒரு மனிதனிடம் தன் சந்தேகங்களை கேட்கிறான். அவரும் அவனின் கேள்விகளுக்கு பதில் தருகிறார். நம் அனைவருக்கும் இறைவனிடத்தில் கேட்க பல கேள்விகள் உண்டு ! அவற்றில் பெரும்பான்மையான கேள்விகளை அர்ஜுனன் (மனிதன் ) கிருஷ்ணனிடம் (கடவுள்) கேட்கிறான். பதில் பெறுகிறான்.
இன்றைய நிலையில் பகவத் கீதை கார்ப்பரேட் உலகிற்கு மேலாண்மை சூத்திரங்களை (Business management) சொல்லும் நூலாக மாறிவிட்டது. என்னை பொறுத்தவரையில் மனிதனுக்கு அனைத்தையும் தரும் நூல் கீதை. அதை வணிகமாக மாற்றியிருப்பது மேற்கு உலகின் பணம் சார்ந்த தன்மையையே காட்டுகிறது. Materialistic mentality of west ! அவர்களாவது கீதையை வர்த்தகத்திற்கு உபயோகப்படுத்தி கொண்டார்கள். நம்மில் பலரும் அதை புரட்டிக் கூட பார்த்ததில்லை . Ignorant mentality of India!
கீதையில் என்ன இருக்கிறது ! என்று நீங்கள் கேட்டால், அதில் என்ன இல்லை ! என்பதே பதில். மனிதனின் தன்மை, தன்னம்பிக்கை, ஞானம் , கட்டுப்பாடு, உலகின் தத்துவம் , கடவுள் யார், எப்படி வாழவேண்டும் ?, ஏன் வாழவேண்டும் என்று அதில் சொல்லப்படாததே இல்லை. இப்படி பல சிறப்புகள் கொண்ட கீதையை உலகிற்கு கொடையாக கொடுத்தது நம் பாரதம். நாம் ஒவ்வொருவரும் கீதையை உணர்வது நம் கடமை!
தினம் ஒரு திருக்குறள் போல் தினம் ஒரு கீதை பாடலை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதே இந்த பகுதியின் நோக்கம். இதில் சொல்லப்படும் கீதை விளக்கங்கள் அனைத்தும் அதன் சிறப்பை விளக்குவதற்காக மட்டுமே! அதில் உள்ள உட்கருத்துக்களை விளக்க தகுதியோ திறமையோ எனக்கு இல்லை. இதை படிப்பவர் யாரேனும் கீதையின் சிறப்பை உணர்ந்து முழுமையாக படிக்க முயன்றால் அதுவே என் வெற்றி.
கீதை மகாபாரதத்தின் ஒரு பகுதி. கீதை என்ற சொல்லுக்கு பாடல் என்று பொருள். பகவத் கீதை என்றல் இறைவனால் படபெற்ற பாடல். மகாபாரதத்தில் மொத்தம் 44 கீதைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் குருஷேத்திர போரில் அருளப்பட்ட இந்த ஸ்ரீமத் பகவத் கீதை அனைத்திலும் சிறுப்பு பெற்றதாக கருதப்படுகிறது. ஸ்ரீமத் பகவத் கீதையில் மொத்தம் 700௦௦ பாடல்கள் உள்ளது.
இந்த கீதையின் சிறப்பு என்னவென்றால் அது பேசப்பட்ட இடம். மனிதன் யார்? அவனின் கடமை என்ன? அவன் என்ன செய்ய வேண்டும்? என்ற உன்னத கேள்விகளுக்கு பதில் தரும் கீதையை, ஒரு குரு தன் ஆஷ்ரமத்தில் சீடர்களுக்கு சொல்லுவதைப்போல் அமைத்திருக்கலாம். அல்லது இதே கிருஷ்ணன் வேறு ஒரு தருணத்தில் அர்ஜுனனுக்கு சொல்லுவதாக அமைத்திருக்கலாம். ஆனால் கீதை போர்க்களத்தில் போர் துவங்குவதற்கு சில மணிநேரமே இருக்கும் சமயத்தில் நடப்பதாக அமைந்திருக்கிறது. இந்த காரணமே கீதையை மற்ற அற நூல்களிலிருந்து மாறுபட செய்கிறது.
நாம் பல தருணங்களில் ஒரு செயலை செய்வதற்கு முன்பு யோசிக்கிறோம். பின்பு செயல் முடிவடைந்த பின்பு அதன் முடிவையும் அதன் தாக்கத்தையும் யோசிக்கிறோம். ஆனால் இதைவிட முக்கியமானது அந்த செயலை செய்யும் தருணத்தில் நம் மன நிலை.
சுரேஷ்க்கு இந்தியாவின் முன்னோடி நிறுவனமான " ISRO " வில் வேலைக்கு சேர வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. அவன் எதிர்பார்த்தது போலவே இஸ்ரோவில் இருந்து நேர்முக தேர்விற்கு அழைப்பிதல் கடிதமும் வருகிறது. இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை அனைத்தும் நலம். சுரேஷ்க்கு இன்னொரு நேர்முக தேர்வுக்கான கடிதம் பலபேரின் கனவு நிறுவனமான "NASA " வில் இருந்த வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இரு நேர்முக தேர்வுகளும் ஓர நாள், ஒரே நேரம்., நடக்கும் இடமும் டெல்லியில் உள்ள ஒரு பிரபல 7 நட்சத்திர விடுதி. இருந்தும் சுரேஷ் இஸ்ரோவையே தேர்ந்தெடுத்து நேர்முக தேர்வுக்கு கிளம்பினான் . ஆனால் அவன் உறுதி தேர்வு நடக்கும் வலகம் வரியே நிடித்தது. வளாகத்திற்குள் நுழைந்தவுடன் அவனையறியாமல் குழப்பம் அவனை சூழ்ந்தது. எந்த நேர்முக தேர்வுக்கு செல்வது சிறு வயதிலிருந்து கனவு கண்ட இஸ்ரோவுக்கா அல்லது தான் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத வளங்களை தரும் நாசாவுக்கா . குழம்பினான் ,தவித்தான். என்ன செய்வது யாரிடம் கேட்பது ! இந்த நிலையில் ஒரு பண்பட்ட மனிதர் அவனின் நிலையை அவனுக்கு விளக்கி, வாழ்வின் தத்துவங்களை எடுத்துச்சொல்லி ஒரு நிலையான முடிவிடுக்க தூண்டினார். சுரேஷ் கேட்டான் , தெளிந்தான் தான் விரும்பிய தேர்விற்கு சென்றான் வென்றான் .
கடவுள் மனிதனுக்கு அறிவுரை வழங்குவது ,
தேவ தூதர்கள் நெறிகளை வகுப்பது,
ஒரு காவியத்தின் வழியே வாழ்வியல் முறையை தெரிந்து கொள்வது ,
தத்துவார்த்தமான விளக்கங்களை உள்ளடக்கியது என்ற வகைகளிலேயே உலகின் ஆதி நூல்கள் வெளிப்பட்டது .
ஆனால் கீதை இதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. மனிதன் கடவுளிடம் அல்லது கடவுள் தன்மை உள்ள ஒரு மனிதனிடம் தன் சந்தேகங்களை கேட்கிறான். அவரும் அவனின் கேள்விகளுக்கு பதில் தருகிறார். நம் அனைவருக்கும் இறைவனிடத்தில் கேட்க பல கேள்விகள் உண்டு ! அவற்றில் பெரும்பான்மையான கேள்விகளை அர்ஜுனன் (மனிதன் ) கிருஷ்ணனிடம் (கடவுள்) கேட்கிறான். பதில் பெறுகிறான்.
இன்றைய நிலையில் பகவத் கீதை கார்ப்பரேட் உலகிற்கு மேலாண்மை சூத்திரங்களை (Business management) சொல்லும் நூலாக மாறிவிட்டது. என்னை பொறுத்தவரையில் மனிதனுக்கு அனைத்தையும் தரும் நூல் கீதை. அதை வணிகமாக மாற்றியிருப்பது மேற்கு உலகின் பணம் சார்ந்த தன்மையையே காட்டுகிறது. Materialistic mentality of west ! அவர்களாவது கீதையை வர்த்தகத்திற்கு உபயோகப்படுத்தி கொண்டார்கள். நம்மில் பலரும் அதை புரட்டிக் கூட பார்த்ததில்லை . Ignorant mentality of India!
கீதையில் என்ன இருக்கிறது ! என்று நீங்கள் கேட்டால், அதில் என்ன இல்லை ! என்பதே பதில். மனிதனின் தன்மை, தன்னம்பிக்கை, ஞானம் , கட்டுப்பாடு, உலகின் தத்துவம் , கடவுள் யார், எப்படி வாழவேண்டும் ?, ஏன் வாழவேண்டும் என்று அதில் சொல்லப்படாததே இல்லை. இப்படி பல சிறப்புகள் கொண்ட கீதையை உலகிற்கு கொடையாக கொடுத்தது நம் பாரதம். நாம் ஒவ்வொருவரும் கீதையை உணர்வது நம் கடமை!
தினம் ஒரு திருக்குறள் போல் தினம் ஒரு கீதை பாடலை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதே இந்த பகுதியின் நோக்கம். இதில் சொல்லப்படும் கீதை விளக்கங்கள் அனைத்தும் அதன் சிறப்பை விளக்குவதற்காக மட்டுமே! அதில் உள்ள உட்கருத்துக்களை விளக்க தகுதியோ திறமையோ எனக்கு இல்லை. இதை படிப்பவர் யாரேனும் கீதையின் சிறப்பை உணர்ந்து முழுமையாக படிக்க முயன்றால் அதுவே என் வெற்றி.
கீதை மகாபாரதத்தின் ஒரு பகுதி. கீதை என்ற சொல்லுக்கு பாடல் என்று பொருள். பகவத் கீதை என்றல் இறைவனால் படபெற்ற பாடல். மகாபாரதத்தில் மொத்தம் 44 கீதைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் குருஷேத்திர போரில் அருளப்பட்ட இந்த ஸ்ரீமத் பகவத் கீதை அனைத்திலும் சிறுப்பு பெற்றதாக கருதப்படுகிறது. ஸ்ரீமத் பகவத் கீதையில் மொத்தம் 700௦௦ பாடல்கள் உள்ளது.
இந்த கீதையின் சிறப்பு என்னவென்றால் அது பேசப்பட்ட இடம். மனிதன் யார்? அவனின் கடமை என்ன? அவன் என்ன செய்ய வேண்டும்? என்ற உன்னத கேள்விகளுக்கு பதில் தரும் கீதையை, ஒரு குரு தன் ஆஷ்ரமத்தில் சீடர்களுக்கு சொல்லுவதைப்போல் அமைத்திருக்கலாம். அல்லது இதே கிருஷ்ணன் வேறு ஒரு தருணத்தில் அர்ஜுனனுக்கு சொல்லுவதாக அமைத்திருக்கலாம். ஆனால் கீதை போர்க்களத்தில் போர் துவங்குவதற்கு சில மணிநேரமே இருக்கும் சமயத்தில் நடப்பதாக அமைந்திருக்கிறது. இந்த காரணமே கீதையை மற்ற அற நூல்களிலிருந்து மாறுபட செய்கிறது.
நாம் பல தருணங்களில் ஒரு செயலை செய்வதற்கு முன்பு யோசிக்கிறோம். பின்பு செயல் முடிவடைந்த பின்பு அதன் முடிவையும் அதன் தாக்கத்தையும் யோசிக்கிறோம். ஆனால் இதைவிட முக்கியமானது அந்த செயலை செய்யும் தருணத்தில் நம் மன நிலை.
சுரேஷ்க்கு இந்தியாவின் முன்னோடி நிறுவனமான " ISRO " வில் வேலைக்கு சேர வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. அவன் எதிர்பார்த்தது போலவே இஸ்ரோவில் இருந்து நேர்முக தேர்விற்கு அழைப்பிதல் கடிதமும் வருகிறது. இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை அனைத்தும் நலம். சுரேஷ்க்கு இன்னொரு நேர்முக தேர்வுக்கான கடிதம் பலபேரின் கனவு நிறுவனமான "NASA " வில் இருந்த வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இரு நேர்முக தேர்வுகளும் ஓர நாள், ஒரே நேரம்., நடக்கும் இடமும் டெல்லியில் உள்ள ஒரு பிரபல 7 நட்சத்திர விடுதி. இருந்தும் சுரேஷ் இஸ்ரோவையே தேர்ந்தெடுத்து நேர்முக தேர்வுக்கு கிளம்பினான் . ஆனால் அவன் உறுதி தேர்வு நடக்கும் வலகம் வரியே நிடித்தது. வளாகத்திற்குள் நுழைந்தவுடன் அவனையறியாமல் குழப்பம் அவனை சூழ்ந்தது. எந்த நேர்முக தேர்வுக்கு செல்வது சிறு வயதிலிருந்து கனவு கண்ட இஸ்ரோவுக்கா அல்லது தான் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத வளங்களை தரும் நாசாவுக்கா . குழம்பினான் ,தவித்தான். என்ன செய்வது யாரிடம் கேட்பது ! இந்த நிலையில் ஒரு பண்பட்ட மனிதர் அவனின் நிலையை அவனுக்கு விளக்கி, வாழ்வின் தத்துவங்களை எடுத்துச்சொல்லி ஒரு நிலையான முடிவிடுக்க தூண்டினார். சுரேஷ் கேட்டான் , தெளிந்தான் தான் விரும்பிய தேர்விற்கு சென்றான் வென்றான் .